Advertisement

Main Ad

மத்தியமுகம், சவளக்கடை பிரதேசத்தில் ரமழனை வரவேற்போம் மாபெரும் இஜ்திமா





Mohamed Jafeer Mahroof


மத்தியமுகம், சவளக்கடை மஜ்லிசுத் தஃவாவின் ஏற்பாட்டில் ரமழனை வரவேற்போம் மாபெரும் இஜ்திமாவும் தர்பியா நிகழ்வும் இன்று 2015.06.12 வெள்ளிக்கிழமை மத்தியமுகாம், 12 ஆம் கொளனி, 2 ஆம் வட்டாரம் அல்-மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆப் பள்ளிவாசலில் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 9.00 மணிவரை நடைபெறவுள்ளது.

ரமழானும் இஸ்லாமிய பெண்களும், அல்-குர்ஆன், அஸ்-சுன்னாஹ் வாழ்வின் வழிகாட்டிகள், ரமழனை வரவேற்போம் எனும் தலைப்புகளில் மார்க்க செற்பொழிவு இடம்பெறும்.

இவ் மாபெரும் இஜ்திமாவும் தர்பியா நிகழ்வுக்கு பெண்களுக்கு தனியான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆண், பெண் இருபலருக்கும் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுக்கின்றனர்.