Advertisement

Main Ad

மர்ஹூம் அஷ்ரபின் அன்பு மகள் ஸ்ரீ.ல.மு.கா- காலமானார் என்ற தலைப்பில் கல்முனையில் ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியாகியுள்ளது அதனை மக்களுக்காக இங்கு தருகிறோம்.

(எஸ்.அஷ்ரப்கான்)



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி  பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது.

கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். தன்னுடைய அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸின் இந்த அறிவிப்பு தொடர்பாக கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருந்தாலும்   ஜனாஸா அறிவித்தல் என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியாகியுள்ளது அதனை மக்களுக்காக இங்கு தருகிறோம்.