மக்காவில் 27 ஆம் இரவு தராவீஹ் தொழுகையில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்பு!
புனித ரமளானின் 27 ஆம் இரவு லைல்லத்துல் கத்ர் இரவை சிறப்பிக்கும் விதமாக சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் நேற்று இரவு பங்கெடுத்தனர்.
தராவீஹ் தொழுகை அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் நடைபெற்ற க்யாமுல் லைல் தொழுகையில் முஸ்லிம்கள் கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர்.
ரமளான் தொடக்கத்திலிருந்தே உலகின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் உம்ராவிற்காக வந்தவண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே ரமளானை முன்னிட்டு மக்கா மற்றும் மதீனாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சவூதி அரசு செய்துள்ளது.