(க.கிஷாந்தன்)
சீனா சுவான் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 300 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திலும், நீளம் பாய்தலிலும் அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த ஆர்.டபிள்யூ.துஷானி தினேஷிக்கா வெள்ளி பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.
இவர் இரண்டு போட்டிகளிலும் வெள்ளி பதக்கங்களை வென்றெடுத்து இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
14.07.2015 அன்று கினிகத்தேனை பகுதி பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், கினிகத்தேனை பொலிஸார் ஆகியோர் ஆர்.டபிள்யூ.துஷானி தினேஷிக்காவை வரவேற்றனர்.
அதன் பின் வாகன பேரணி துஷானி தினேஷிக்கா கல்வி கற்கும் அம்பகமுவை பாடசாலைக்கு சென்றது.
அங்கு துஷானி தினேஷிக்காவுக்கும் இவரை பயிற்சி அளித்த அனுர பண்டார திஸாநாயக்கவுக்கும் அங்கு வரவேற்பு இடம்பெற்றது.
இந்த துஷானி தினேஷிக்காவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அதிகளவிலான பொது மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடதக்கது.