
கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அவரின் அருகில் வந்த முன்னாள் எம்.பி. காமினி லொகுகே அவருக்கு அழைப்பொன்று வந்துள்ளதாக தெரிவித்து கையடக்கத் தொலைபேசியையும் அவருக்கு வழங்கினார்.
இதனையடுத்து உரையாடிய மஹிந்த ராஜபக்ஷ அக்கூட்டத்திலிருந்து இடைநடுவே விடைபெற்றுச் சென்றார்.
இது தொடர்பில் நேற்று பரபரப்பாக பேசப்பட்ட து.
மஹிந்த இவ்வாறு கூட்ட த்தின் இடைநடுவிலேயே கிளம்பிச் செல்ல காரணம் அவரது கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த சுகயீனமுற்றமையென தெரிவிக்கப்படுகின்றது.
சுசில் பிரேமஜயந்த நேற்று நள்ளிரவு திடீரென சுகயீனமுற்றிருந்தார். பின்னர் அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வேட்புமனு தொடர்பான முரண்பாடே அவர் திடீரென சுகயீனமுறக்காரணமென தெரிவிக்கப்படுகின்றது.