Advertisement

Main Ad

ஹட்டனில் குளிக்கச் சென்ற பெண் சடலமாக மீட்பு


ஹட்டனில் குளிக்கச் சென்ற பெண் சடலமாக மீட்புஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்திலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலையில் தொழில்புரியும் குறித்தபெண் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் குளிக்கச் சென்றபோதே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.
சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.