Advertisement

Main Ad

சற்று முன்னர் வந்த செய்தி) யாழ்.கிளாலி கண்ணிவெடியில் கண்களை இழந்த இராணுவ வீரர் !

 இன்று (24) காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த வெடி விபத்தில் மிருசுவில் கேற்பேலி இராணுவ முகாமைச் சேர்ந்த சமன் குமார (வயது 27) என்ற இரர்ணுவ வீரரே படுகாயமடைந்தவராவார்.  யாழ்.கிளாலிப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடியொன்று வெடித்ததில் தனது இரண்டு கண்களையும் இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  படுகாயமடைந்த இவர் முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.