20.02.2016 நடைபெற்ற உடுவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை தாங்கி உரை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தமிழ் அரசர்கள் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக காணப்படும் கந்தரோடை கந்தரோடை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதிகள் புராதன வரலாற்று சின்னங்கள் தமிழ் அரசர்களின் அடையாளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதனால் அது தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு அகழ்வு ஆராட்சி செய்யப்பட்டு பொருள் சின்னங்கள் யாழ்ப்பான நூதன சாலையில் பேணப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்ள் பாதுக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்க்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்
மேலும் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களுடைய குறைநிறைகளை சபையில் தெரிவித்ததோடு குறிப்பாக விவசாயிகள் இந்த முறை நெற் செய்கையில் பாரிய நட்டத்தை அடைந்ததாகவும் அதற்க்கு காரணம் வாய்க்கால் வழியாக நீர் ஓடாததை காரணம் காட்டினார்கள் அதற்கு பா .உ அங்கஜன் இராமநாதன் அந்த வாய்க்காலை திருத்துவதற்கு ஆவன செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்
0 Comments