Advertisement

Main Ad

உலக இருபது 20 போட்டிகளில் பாகிஸ்தான் பங்குபற்றத் தவறினால் ஐ.சி.சி. சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் என்ற செய்தி அர்த்தமற்றது

பாது­காப்பு கார­ணங்­களைக் காட்டி உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் பாகிஸ்தான் பங்­கு­பற்றத் தவ­றினால் அந் நாட்டு கிரிக்கெட் சபைக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) எச்­ச­ரித்­தி­ருப்­ப­தாக ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டி­ருப்­பது அர்த்­த­மற்­றது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறை­வேற்றுக் குழுத் தலைவர் நஜாம் சேதி தெரி­வித்­துள்ளார்.

‘‘உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் எமது பங்­கேற்பு குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எம்­மிடம் கேட்­டுள்­ளது.

இந்­தி­யா­வுக்கு பய­ணிப்­ப­தற்­காக பாகிஸ்தான் அரசின் அனுமதியைப் பெறும்­பொ­ருட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எழுத்­து­மூலம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக நாங்கள் அவர்­களுக்கு (ஐ.சி.சி) அறி­வித்­துள்ளோம். 

இவ் விட­யத்தில் அர­சாங்­கத்தின் அனு­ம­திக்­கான பதி­லுக்­காக காத்­தி­ருக்­கின்றோம்’’ என பாகிஸ்தான் ஊடகம் ஒன்­றுக்கு சேதி தெரி­வித்­துள்ளார்.

‘‘இவ் விட­யத்தில் வேறொன்றும் இல்லை. இவ் ­வி­டயம் தொடர்­பாக சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எம்­மிடம் எத­னையும் கேட்­க­வுமில்லை, நாங்கள் அது பற்றி அவர்­க­ளிடம் தொடர்பு கொள்ளவும் இல்லை’’ என அவர் மேலும் கூறினார்.

‘‘இந்­தி­யாவில் வரும் மார்ச் மாதம் நடத்­தப்­ப­ட­வுள்ள உலக இருபது 20 கிரிக்கெட் போட்­டிகள் தொடர்­பாக பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவ­லைப்­ப­டு­வது அடிப்­ப­டை­யற்­றது.

இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள பாது­காப்பு குறித்து (ஐ.சி.சி.) திருப்தி அடைந்­துள்­ளது’’   என ஊட­க­மொன்றில் வெளி­யான செய்தி ஒன்றில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.  

அந்த செய்தி அறிக்­கையில், ‘‘பெரு­ம­ள­வி­லான பாகிஸ்தான் போட்­டி­யா­ளர்கள் இந்­தி­யா­வுக்கு பய­ணித்து தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் கலந்­து­கொள்ள முடி­யு­மாக இருந்தால், சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் முக்­கிய போட்­டியில் 20 பாகிஸ்­தா­னி­யர்­களை பங்­கு­பற்றச் செய்­வ­தற்கு அனு­ம­திக்­க ­மு­டி­யா­த­தற்கு காரணம் எதுவும் இல்லை’’ எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தான் அணி இந்­தியா விஜயம் செய்­வ­தற்கு அர­சாங்கம் அனு­ம­திக்­காத பட்­சத்தில் தங்­க­ளது உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களை நடு­நி­லை­யான மைதா­னத்தில் நடத்­து­மாறு சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யிடம் பாகிஸ் தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹா­ரியார் கான் கடந்த 9 ஆம் திகதி கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் மார்ச் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன.

பாகிஸ்தான் அணிக்கு இந்­தி­யாவில் குறிப்­பி­டத்­தக்க அச்­சு­றுத்தல் இருப்­பதால் தமது இந்­திய விஜயம் அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தாக கான் கூறி­யி­ருந்தார்.

பாகிஸ்­தா­னுக்கு குறிப்­பி­டத்­தக்க அளவு அச்­சு­றுத்தல் இருப்­பது அண்­மைய சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­வ­தாக கான் தெரிவித்தார்.

‘‘பங்­க­ளா­தேஷில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இருந்தது போன்ற சாதா­ரண அச்­சு­றுத்­தல்கள் அல்ல அவை. எனி னும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா தனது அணியை அனுப்பவில்லை’’ என்பதை கான் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அவஸ்திரேலியா வாபஸ் பெற்றிருந்தது.

Post a Comment

0 Comments