எந்தவொரு மனுவும் சுமார் 100,000 பேரின் கையெழுத்துகளுடன் நிறைவேற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பாரீஸில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழையத் தடைவிதிக்க வேண்டுமென டொனால்ட் சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்திருந்தார்.
அவருக்கெதிராக பலர் தமது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் பிரித்தானியாவில் கையெழுத்திட்டு அவருக்கெதிரான தமது மனுக்களைப் பதிவு செய்துள்ளனர்.
டொனால்ட்டின் சர்ச்சையான கருத்திற்கெதிரான கருத்துகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக அறைகூவல் விடுப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என அமெரிக்க இராணுவத் தலைமையகமும், இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் தகுதியை ட்ரம்ப் இழந்துவிட்டதாக ஜனாதிபதி மாளிகையும் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி - மூன் கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தின்போது அறைகூவல்கள் விடுப்பது எல்லா நாட்டிலும் சகஜம்.
ஆனாலும், தஞ்சம் கேட்டு வரும் பிற நாட்டினர் மீதும், மதத்தினர் மீதும் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது கண்டனத்துக்குரியது'' என கூறியுள்ளார்.