Advertisement

Main Ad

காதலியை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்த கடற்படை வீரர் -


மாத்­தறை வெவஹ­மன்­துவ பிர­தே­சத்தில் கடற்­படை வீரர் ஒரு வர் தனது காத­லியை சுட்டுக்கொன்று தானும் தற்­கொலை செய்து கொண்­டுள்ளார். இந்தச் சம்­பவம் நேற்றுமுன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது.

துப்­பாக்கி பிர­யோ­கத்தில் கொல்­லப்­பட்­டவர் வௌஹ­மன்­துவ பிர­தே­சத்தை சேர்ந்த 26 வய­து­டைய யுவதி  எனவும் தற்­கொலை செய்து கொண்­டவர் தங்­காலை கடற்­படை முகாமில் கட­மை­யாற்றி வந்த கோட்­டே­கொட பாதே­கம பிர­தே­சத்தை சேர்ந்த 26 வய­தான  கடற்­படை வீரர் ஒருவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்­சாளர்  அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

உயி­ரி­ழந்த கடற்­படை வீரர் தனது உத்­தி­யோ­க­பூர்வ துப்­பாக்­கியில் சுட்டுக் கொண்டு தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தா­கவும் இரு­வ­ருக்கும் இடை­யி­லான காதல் விவ­காரம் தொடர்­பான பிரச்­சி­னையே இச் சம்­ப­வத்­துக்கு கார­ண­மென ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ளது.

மேலும், கொலைக்­காக பயன்­ப­டுத்­திய ரீ-56 ரக துப்­பாக்கி மற்றும் 43 ரவை­க­ளுடன் கூடிய மெகசின் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.