கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை முற்பகல் 11 மணிமுதல் மறுநாளான ஞாயிறு காலை வரையில் நீர் விநியேகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் வருமாறு :
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியா.