சுவிட்ஸர்லாந்தின் தென்பிராந்தியத்திலுள்ள “டிசினோ” எனும் பிராந்திய நாடாளுமன்றமே இச்சட்டமூலத்தை கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இதன்படி டிசினோ பிராந்தியத்தில் கடைகள், உணவகங்கள், பொதுக் கட்டடங்கள் உட்பட பொது இடங்களில், முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவது குற்றமாகும்.
இத்தடையை மீறி புர்கா, நிகாப் ஆடைகளை அணிபவர்களுக்கு சுமார் 13 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்.
இந்த வாக்களிப்பானது டிசினோ பிராந்தியத்தில் மனித உரிமைகளுக்கான கறுப்புத் தினமாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.
டிசினோ நாடாளுமன்றத்தில் இச்சட்ட மூலம் அங்கீகரிக்கப்படுவதற்குமுன் அப் பிராந்தியத்தில் பொதுமக்களிடமும் 2013 ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இச்சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
சுவிட்ஸர்லாந்தில் நாடளாவிய ரீதியிலான புர்கா தடைக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு அந்நாட்டு மக்கள் வாக் களித்திருந்தனர்.
பாசெல், பேர்ன், ஷிவிஸ், சொலோதுர்ன், பிரைபோக் பிராந்தியங்கள் ஏற்கெனவே இத்தடையை நிராகரித்திருந்தன.