Advertisement

Main Ad

புதிய கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி அல்-இனாறா மெனேஜ்மன்ட் தெரிவு



இலங்கை குடி வரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி பிரதான வீதி இலக்கம் 357 லுள்ள அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான்-jp தெரிவித்தார்.

இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை இலங்கை குடி வரவுஇகுடியகல்வு திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமொன்றின் மூலமே வழங்கமுடியும்.

அதற்கான அங்கீகாரத்தை காத்தான்குடியிலுள்ள மேற்படி அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனத்திற்கு குடிவரவு ,குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளதாக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.