Advertisement

Main Ad

ரயில் நிலை­யத்தில் பாலியல் உறவு ­கொண்ட காதல் ஜோடிக்கு வலை விரிப்­பு

பிரித்­தா­னி­யாவின் மெல்­டோன் ரயில் நிலை­யத்தில்  பாலியல் உறவு வைத்­துக்­கொண்ட காதல் ஜோடி குறித்து அப்­ப­குதி பொலிஸார் தேடுதல் நட­வ­டிக்­­கை­யில் ஈடு­­பட்­டுள்­ளனர். 

வடக்கு யார்­க் ஷயர் பகு­தியில் அமைந்­துள்ள மெல்­டோன் ரயில் நிலை­யத்தில் புகுந்த ஒரு இளம் ஜோடி அங்­கி­ருந்த பய­ணிகள் முகம் சுழிக்­கும்­படி நடந்­து­கொண்­டுள்­ளது.

நடை­பா­தையில் சிறுநீர் கழித்த இளை­ஞரை பாராட்­டிய இன்­னொரு இளைஞன் அங்­கி­ருந்த குப்­பைத்­தொட்­டியை நகர்த்தி நடை­பா­தையில் இட்டு மிதித்­துள்ளார்.

இத­னி­டையே, ஒரு ஜோடி அங்­கி­ருந்த பய­ணிகள் முன்­னி­லையில் அநா­கரிக­மா­க நடந்­துள்­ளனர். 

பின்னர் அங்­கி­ருந்து நகர்ந்து சென்று அரு­கா­மையில் இருந்த மிதி­வண்டி நிறுத்­து­மி­டத்தில் அந்த ஜோடி உறவு கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­ற­து.

இத­னி­டையே, போக்­கு­வ­ரத்து பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்டு, அவர்கள் சம்­பவ பகு­திக்கு வந்து சேரும் முன்­னரே அந்த ஜோடி­ அங்­கி­ருந்து தப்­பி­யுள்­ளது.

ரயில் நிலை­யத்தில் பாலியல் உறவு கொண்­ட ஜோடி­களின் மொத்த நட­வ­டிக்­கையும் அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த சி.சி.டி.வி. கெம­ராக்­களில் பதிந்­துள்­ளன.

அந்த பதி­வு­களை சோத­னை­யிட்ட பொலிஸார் அவர்­களை தேடி வரு­கின்­றனர்.

மேலும் அந்த நபர்கள் குறித்து கூடுதல் தகவல்கள் அறியவரும் பொதுமக்களும் பொலிஸா­ருக்கு தகவல்கள் தந்து உதவும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.