அமெரிக்காவிலுள்ள ஒரு தம்பதியினர் தமது வீட்டின் கூரையில் காரொன்று நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
தான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது கூரையில் சத்தமொன்று கேட்டதாகவும் வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் கூரையில் காரொன்று இருப்பதைக் கண்டு தான் வியப்புற்றதாகவும் 83 வயதான பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி காரின் சாரதி சுகவீனமுற்றதால் கட்டுப்பாட்டை இழந்தபோது அக்கார், வீட்டின் கூரை மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.