தலவாக்கலை நகரில் தோட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் ரனில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். அதேவேளை இம்மாத இறுதிக்குள் பெற்று தராத பட்சத்தில் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா பணத்தினை நிறுத்தி விடுவோம் என மெராயா தங்ககலை தோட்ட சந்தியில் 26.10.2015 அன்று காலை 08 மணிக்கு நடைப்பெற்ற ஒரு மணிநேர ஆர்பாட்டத்தில் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 07 தடவை நடைபெற்ற பேச்சுவார்தையின் உண்மையான வெளிபாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர். எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மனோகனேசன் இன்னும் பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும் ஆனால் வாக்களியுங்கள் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம் ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிடவேண்டுமென வழியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம்.
தொழிலாளர்களை பகடகாய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்க போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள விழித்துகொண்டே இருக்கின்றோம். ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வாக்கு பலத்தினை கொண்ட எமக்கு எதிர் காலத்தில் வரும் தேர்தல்களில் என்ன செய்வது என்று தெரியும் தற்போது கிடைக்கும் சம்பள தொகையில் வாழ்க்கையை சமாளிக்க முடியவில்லை.
பிள்ளைகளின் கல்வி பாலாகிபோகின்றது என்பதினை உணர்ந்தவர்கள் தான் எமது தலைவர்கள் தீபாவளி திரு நாளை கொண்டாட காத்திருக்கின்றோம். இந் நிலையில் பொருட்களின் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது.
எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
ஆகவே இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தினை நிறுத்துவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.