Advertisement

Main Ad

மலையகத்தில் பறிக்கப்பட்ட பல மில்லியன் பெருமதியான தேயிலை கொழுந்துகள் நாசம்...


( B.THIRUGNANAM – PUSSELLAWA PROVINCIAL REPOTER ) 

பெருந்தோட்ட தொழிளாலர்களின் சம்பள உயர்வு வேண்டி “மெதுபனி” (மெதுவாகவேலை) தொடர்ந்துவருகின்றது.  06.07.2015 ஆரம்பமான சம்பள உயர்வு போராட்டம் தொடர்ந்து 09 வது நாளாக இன்றும் (14) தொடர்கின்றது.

இக்காலப்குதியில் தோட்ட தொழிலாளர்களினால் பறிக்கப்ட்ட தேயிலை கொழுந்துகளை தோட்டநிர்வாகம் சேமித்து தேயிலைதூள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படாததினால். பறிக்கப்ட்ட தேயிலை கொழுந்துகள் தோட்டங்களில் பழுதடைந்து பாவனைக்கு உதவாமல் தேங்கிகிடக்கின்றன.

ஒருசிலஅரசமற்றும் தனியார் தோட்டங்களில் பறிக்கப்பட்ட கொழுந்துகள் தேயிலை தூள் உற்பத்தில் ஈடுப்படுத்தப்ட்டாலும் பெருபாலான தோட்டங்களில் அவை நடைபெறவில்லை.  இதனால் மலையகத்தில் காணப்படும் சுமார் 460 தோட்டங்களில் பறிக்கப்ட்டகொழுந்துகள்  இவ்வாறு கைவிடப்பட்டமை பலமில்லியன் ரூபாய் நஸ்ட்டத்தை பெருந்தோட்டதுறை தனதாக்கி கொண்டுள்ளது.

இவ்வாறு பழுதடைந்த பாரியஅளவிலான தேயிலை கொழுந்துகள் கொத்மலை ஹெல்பொட, புஸ்ஸல்லாவடெல்டா, ஸ்டெலன்பேர்க் தோட்டங்களில் காணக் கூடியதாக இருந்ததோடு மக்கள் 1000 ரூபாய் சம்பளம் வேண்டி ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டு தங்கள் கருத்துக்களை ஊடகங்களுக்கும் தெரிவித்தனர்.

நாளை (15.07.2015) நடைபெரும் முதலாளிமார் சம்மேளத்துடனான பேச்சுவார்த்தையின் போது தோட்ட மக்களின் சம்பள பிரச்சனைக்கு ஒருநல்ல தீர்வுகிடைக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.