( முஹம்மட் றின்ஸாத் )
சாய்ந்தமருதில் புதிய பள்ளிவாசல் இப்தார் நிகழ்வோடு திறந்து வைக்கப் பட்டுள்ளது.
இன்று 2015.07.16 ம் திகதி சாய்ந்தமருது 2 கடற்கரை வீதியில் புதிய பள்ளிவாசல் ஒன்று இப்தார் நிகழ்வோடு திறந்து வைக்கப் பட்டுள்ளது.
அப்பிரதேசத்திற்கு பள்ளி இல்லாத குறையும் இப்பள்ளி முலம் தீர்த்து வைக்கப் பட்டுள்ளது.
அப்பள்ளிவாசளுக்கு மஸ்ஜிதுர் குபா எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது.
இந் நிகழவுக்கு சிறப்பு அதிதிகளாக முன்னால் பாராளுமன்ற உருப்பினர் HMM. ஹரீஸ் அவர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உருப்பினர் பசீர் அவர்களும் கழந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனோடு பல உலமாக்களும் மார்க்க அறிஞர்கும் ஊர் பிரமுகர்களும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
இன்னும் 500 க்கும் மேற்பட்டோருக்கு இப்தார் நிகழ்வு இடம்பெற்றதோடு மஃரிப் தொழுகையிலும் அனைவரும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.














