Advertisement

Main Ad

மக்களை பலாத்கார வழிக்கு தூண்டும் சாய்ந்தமருது பள்ளிவாசல் !



( NDPHR Democratic Party for Human Rights )


 மக்களை ஒத்துமையாகவும் , சமாதானமாகவும் வழி  நடத்த வேண்டிய பள்ளிவாசல்  சில சுயநல அரசியல் வாதிகளினால் ஆட்டுவிக்கப் படுகின்றது.  ஏமாற்றும் அரசியல் வாதிக்கு  ஊரில் மாலை மரியாதை வரவேற்பு ஏமாற்றப் பட்டபின் கடை அடைப்பு , மீண்டும்  மாலை மரியாதை வரவேற்பு இதுதான் சாய்ந்தமருதூரின் சாணக்கியம்.  


தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இங்கு கூறிக் கொள்வது என்னவென்றால் துரத்தி அடிக்கப் படவேண்டியது உங்களை ஏமாற்றிய அரசியல்வாதியை  கடை அடைப்பு அல்ல, மேலும் மக்கள் இக் கோரிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறது இவ்வாறான நட வடிக்கைகள் உங்களை ஒரு இனத் துவேசவாதிகள் என்ற வகையில் மற்றச் சமூகத்தால் பிரட்டிக் காட்டப் படும் என்பதயும் கவனத்தில் கொள்ளவும்