Advertisement

Main Ad

தரம் ஒன்­றுக்கு 35 மாண­வர்­க­ளே அனு­ம­தி சுற்றுநிருபம் வெளிய­ா­கி­ய­து




umar lebbe Huthaumar



அர­சாங்க பாட­சா­லை­களில் முதலாம் தரத்­திற்­காக உள்­வாங்­கப்­ப­டும் ­மா­ண­வர்­க­ளின்­எண்­ணிக்­கையை 35 ஆக மட்­டுப்­ப­டுத்த கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இது தொடர்பில் 2007ஆம் ஆண்டு உயர்நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் பிர­காரம் மாண­வர்கள் தொகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாககல்வி அமைச்சின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.2016 ஆம் ஆண்­டில் முதலாம் தரத்­திற்­கு மாண­வர்­களை இணைத்து கொள்­வ­தற்­கான சுற்று நிருபம் நேற்று கல்வி அமைச்­சினால் வெளியி­டப்­பட்ட­து.

இந்த சுற்று நிரு­பத்­தி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்­திற்கு ஆகக்­கூ­டி­யது 35மாண­வர்­களே இருக்கவேண்டும்.

மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்பை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு வகுப்­பிற்­காக 28 மாண­வர்கள் இணைத்­துக்­கொள்ளப்­ப­டுவர். இதில் அநீதி இழைக்­கப்­பட்­ட­தாக முறைப்­பாடு செய்­ப­வர்­களில் இரண்டு மாண­வர்­க­ளும் பாது­காப்பு துறை சேவை­களில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களின் பிள்­ளைகள் 5 பேரும் என மொத்­த­மாக 35 பேர் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளனர்.

பாட­சா­லையை அண்­மித்து வசிப்­ப­வர்­களில் 50 வீதத்­தி­லா­னோரும் பாட­சா­லையின் பழைய மாணவரின் பிள்­ளைகள் என்ற விதத்தில் 25 வீதத்­தி­னரும் பாட­சாலை மாண­வர்­களின் சகோ­த­ரர்கள் என்ற அடிப்­ப­டையில் 15 வீதத்­தி­னரும் கல்வி அமைச்­சுடன் தொடர்­பு­டை­ய­தாக இயங்கும் காரி­யா­ல­யங்­களில் தொழில் புரி­வோரின் பிள்­ளைகள் 05 வீதத்­தி­னரும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர்.

அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் மாணவர்களை அனுமதிக்கும் போதும் பாடசாலை அபிவிருத்திச்சங்க பணம், சேவைக் கட்டணம் தவிர்ந்த ஏனைய கட்டணங்கள் எவையும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.