பைஷல் இஸ்மாயில் –
பாலமுனையில் அமைந்துள்ள அரச ஹோமியோபதி இலவச சிகிச்சை நிலையத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும்
இராஜாங்க அமைச்சருமான என்.ரீ.ஹசனலி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்
உள்ளிட்ட குழுவினர் நேற்று (22) பார்வையிட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் விஜயத்தை மேற்கொண்ட
இக்குழுவினர் பாலமுனை உசையினா நகரில் அமைந்துள்ள இந்த அரச ஹோமியோபதி இலவச சிகிச்சை நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் புதிய கட்டிடம்
தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.




