ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் வெற்றியுடன் கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி தனது செல்வாக்கை நிலை நாட்டும். ஜனாதிபதித் தேர்தலை அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கிழக்கில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி பிரதி நிதிகளில் மூவருக்கு முக்கியமான மூன்று மந்திரிப் பதவிகள் வழங்கப் படலாம் இதன் மூலம் பதவி, அதிகார மோகம் கொண்ட அரசியல் வாதிகள் ஓரம் கட்டப் பட்டு சமூகத்துக்கு நடை முறைக்கு சாத்தியப் படக் கூடிய வகையில் இன, மத, பிரதேச வாதம் என்ற சகதியில் புரட்டப் பட்டுள்ள மாசை துடைத்து எறிந்து அபிவிருத்திகளையும் ஆட்சி முறையினையும் முன் எடுத்து நடை முறைப் படுத்துவதின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கில் மீண்டும் தனது செல்வாக்குப் பெற்று விளங்கும்.

