இதேவேளை காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து மாத்தறைக்கு பயணித்துக்கொண்டிருந்த ரெஜின ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்விபத்து காரணமாக குருநாகல் – பொல்கஹவெல இடையிலான ரயில் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
