ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது பாகிஸ்தான் தேசிய வீரர்களான வஹாப் ரியாஸ், அஹ்மத் ஷேஹ்ஸாத் ஆகிய இருவரும் மோதிக் கொண்டதன் காரணமாக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குவெட்டா க்ளடியேட்டர்ஸ் அணிக்கும் பேஷாவர் ஸல்மி அணிக்கும் இடையிலான போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
போட்டியின் ஐந்தாவது ஓவரில் குவெட்டாவின் அஹ்மத் ஷேஹ்ஸாத்தின் விக்கெட்டை பேஷாவர் வீரர் வஹாப் ரியாஸ் நேரடியாக பதம்பார்த்த பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதுடன் வசைப்பாட்டிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து போட்டிக் கட்டணத்தில் ஷெஹ்ஸாத்துக்கு 30 வீத அபராதமும் வஹாப் ரியாஸூக்கு 40 வீத அபராதமும் பொது மத்தியஸ்தர் ரொஷான் மஹநாமவினால் விதிக்கப்பட்டது.
இந்த வீரர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

0 Comments