பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவில் 14 வயதுடைய விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி என்ற சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொன்டுள்ள சம்பவம் 10.12.2015 அன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி 10.12.2015 அன்று பிற்பகல் தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமி தற்கொலை செய்து கொண்டமைகான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.