முஸ்லிம் கல்வி சமூக ஆய்வுகள் நிறுவனம் (MESRO), கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட் அனுசரணையுடன் நடாத்திய 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை (03) வியாழக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை வலயத்தில் சித்தியடைந்த சுமார் 214 மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிகெளரவிக்கப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்களும், முதல் மூன்று நிலைகள் பெற்ற பாடசாலைகளும் கெளரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து சிறப்பித்தார் .
முஸ்லிம் கல்வி சமூக ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எல்.ஏ.மஜீத், அஸ்லம் பிக்மார்ட் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.எம்.றியாஜ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் .