Advertisement

Main Ad

எத்தனை நாளைக்கு நாம் இந்த நடைப் பிணமான மனதுக்கு சமாதானம் சொல்லி வாழ்வது...?



எத்தனை
நாளைக்கு
நாம் இந்த
நடைப் பிணமான
மனதுக்கு
சமாதானம்
சொல்லி வாழ்வது...?
முள்ளில்
நடந்த
அந்த நாட்களில்
சொப்பிங்
பேக்குடன்
சோகமான.
வலியுடன்
வாழிடம்
தொலைத்து விட்டு
இருந்த நகை
நட்டுகளையும்
கழட்டிக் கொடுத்து
விட்டு..வந்தோம்
கதறினோம்
பதறினோம்..
உதறி எறியப்
பட்ட கறி வேப்பிலையாய்
தானும்
உருகினோம்..
ஒத்துவாரச்
சூறாவளியில்
கசக்கி வீசப்பட்ட
காகிதமானோம்..
எங்களை
உள் வாங்க
எற்க பார்க்க
சில அபிவிருத்திச்
சில்லறைகளை
சுண்டி விட்டனர்..
மல சலம்
கழிக்க
ஆடை மாற்ற
மானம் போக..
அபயம் தேட
ஒழுகிக் கரைந்த
அந்தப்
புத்தளத்தின்
புகலிடக் கொட்டில்கள்
கை விரித்தனவே..
திஹாரியிலும்
கொழும்பிலும்
திரும்பி வராத
பந்தாக எறியப்
பட்டு நொந்து
கிடந்தோம்..
நொந்து
கிடந்து நூறாண்டு
போனாலும்
எங்களை எண்ணிப்
பார்ப்போர்
எவருமிருக்க வில்லை..
புழுதிகளும்
ஆடு மாடுகளும்
உறங்கிய
எங்கள் ஆலயங்களை
பார்த்து பார்த்து
மெய் சிலிர்த்துப்
போனோம்..
தொற்று
நோயிலும்
தூக்கமற்ற நாட்களிலும்
கனவில் வந்து போன
எங்கள் மண்..
நாங்கள் போட்டு
வந்த வீடு வாசல்
உங்களதும்
எங்களதுமான
உறவு பிட்டும்
தேங்காய்ப்
பூவுமென..
காலமெல்லாம்
கவிதை அப்பங்களில்
வார்த்தைச் சீனி
தூவினோமே..
அதற்கு
நீங்கள் தந்த
கைமாறா
இது..?

-காத்தான்குடி ஏ.எச்.எம்.ஜிஹார்-