Advertisement

Main Ad

குருநாகல் மல்லவபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

குருநாகல் மல்லவபிட்டியில் 18.11.2015 அன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



குறித்த முச்சக்கரவண்டி குருநாகல் மல்லவபிட்டி பள்ளிக்கு அருகில் வைத்து பஸ் வண்டி ஒன்றுடன்  மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவணடியில் இருந்த மேலும் இருவர் படுங்காயமடைந்து குருநாகல் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பரீனா உம்மா (38 வயது) என்பவரும் சபீனா (45வயது) என தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி, சாரதியின் தாயார் மற்றும் அவரின் தங்கை ஆகியோரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் குருநாகல் மகவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது