Advertisement

Main Ad

ரஷ்ய விமானத்தை ஐ.எஸ்.வீழ்த்தியதாக கூறுவது வெறும் பிரசார நடவடிக்கை - எகிப்திய ஜனாதிபதி

ரஷ்ய விமா­னத்தை ஐ.எஸ். வீழ்த்­தி­ய­தாக சொல்­லப்­ப­டு­வது வெறும் பிர­சாரம் என எகிப்தி ஜனா­தி­பதி அப்துல் படா அல் சிசி தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து கூறிய எகிப்­திய ஜனா­தி­பதி அப்துல் படா அல் சிசி, "ஐ.எஸ். குழுவினால் விமானம் வீழ்த்­தப்­ப­டு­வ­தாகச் செய்­யப்­படும் பிர­சாரம், எகிப்தின் பாது­காப்பு மற்றும் ஸ்திரத்­தன்­மையை குலைப்­ப­தற்­கான ஒரு வழி­யாகும்.

சினாய் தீப­கற்பம், குறிப்­பாக அந்தப் பகுதி எங்­க­ளு­டைய முழுக்­கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது" என  கூறி­யுள்ளார்.

ரஷ்­யாவைச் சேர்ந்த ஏயார்பஸ் சி 321 ரக விமானம் கடந்த சனிக்­கி­ழமை சினாய் தீவுக்கு மேல் பறந்­து­கொண்­டி­ருந்­த­போது நடு­வானில் சித­றி­யது. இதில் அந்த விமா­னத்தில் பயணம் செய்த 224 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

வெளிக் கார­ணி­க­ளா­லேயே இந்த விமானம் விபத்­துக்­குள்­ளா­ன­தாக, விமானத்தை இயக்கும் நிறு­வ­ன­மான கொக­லி­மா­விய தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால், இது மிகவும் அவ­ச­ர­மாக சொல்­லப்­பட்ட கருத்து என்றும் எந்த சரி­யான தக­வலின் அடிப்­ப­டை­யிலும் சொல்­லப்­ப­ட­வில்­லை­யென்றும் அந்­நாட்டு விமான  போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்தின்  தலை­வ­ரான அலெக்­ஸாந்தர் நெரத்கோ தொலைக்­காட்சி ஒன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்வாறு அவ­ச­ரப்­பட்டு முடி­வு­க­ளுக்கு வர வேண்­டா­மென எகிப்திய ஜனாதிபதி அல் சிசி தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் ஆர்வமுடையவர்கள் அனைவரும் விசாரணையில் பங்கேற்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.