Advertisement

Main Ad

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த ‘புது­வ­ரவு’ மிலிந்த சிறி­வர்­தன - தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த ‘புது­வ­ரவு’ மிலிந்த சிறி­வர்­தன என அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் பாராட்­டி­யுள்ளார்.

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 72 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்டி தொடரைக் கைப்­பற்­றிய பின்னர் மெத்யூஸ் இதனைக் குறிப்­பிட்டார்.

அப் போட்­டியில் மிலிந்த சிறி­வர்­தன ஆட்­ட­நா­யகன் விருதை வென்­றெ­டுத்தார்.
‘‘எமக்கு கிடைத்த அதி சிறந்த ‘புது­வ­ரவு’ மிலிந்த ஆவார். அவர் துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு, களத்­த­டுப்பு என சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்தார்’’ என்றார் மெத்யூஸ்.

‘‘கடந்த இரண்டு மாதங்­களில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இப்­போது டெஸ்ட் அரங்கில் நுழைந்து அதிலும் எவ்­வித பதற்­றமும் இல்­லாமல் நேர்த்­தி­யாக விளை­யா­டினார்.

துடுப்­பாட்­டத்தில் அவர் தனது இயல்­பான ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தினார். அவ­ரது பந்­து­வீச்சும் கனி கொடுத்­தது. இப்­ப­டி­யான ஒருவர் பந்­து­வீச தேவைப்­பட்­டது. பகு­தி­நேர பந்­து­வீச்­சா­ள­ருக்கும் அப்பால் அவர் சிறந்­தவர்'' என ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார்.

முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் அறி­மு­க­மாக ஒரு ஓட்­டத்தை மாத்­திரம் பெற்ற மிலிந்த சிறி­வர்­தன, இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் முதல் இன்­னிங்ஸில் 68 ஓட்­டங்­க­ளையும் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 42 ஓட்­டங்­க­ளையும் பெற்­ற­துடன் இரண்டு இன்­னிங்ஸ்­க­ளிலும் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்தும் வகையில் விக்­கெட்­க­ளையும் சரித்­தி­ருந்தார்.

இவர் 51 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­களைக் கைப்­பற்­றியதன் மூலம் ஒரு சிறந்த சக­ல­துறை வீரர் என்­பதை நிரூ­பித்தார்.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட், சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்­களில் அறி­மு­க­மாக சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய மிலிந்த சிறி­வர்­தன, மூவகை கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் நெடுநாள் இலங்கை அணி­களில் நீடிப்பார் என நம்­பப்­ப­டு­கின்­றது.

‘‘மத்­திய வரி­சையில் எமக்கு ஒரு துடுப்­பாட்­டக்­காரர் தேவைப்­பட்­டார். அதனை ஈடு­செய்­துள்ள மிலிந்த சிறி­வர்­தன, பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்திவருகின்றார். சுழல்பந்துவீச்சுப் பயிற்றுநர் பியால் விஜேதுங்கவிடம் அவர் நிறைய கற்றுக்கொண்டுள்ளார்‘‘ என ஏஞ்சலோ மெத்யூஸ் மேலும் தெரிவித்தார்.