Advertisement

Main Ad

அந்த புகைப்படத்தில் எனது தோளில் கடாபிதான் கையை வைத்திருந்தார் - மஹிந்த


ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்க பிரே­ரணை எந்த வாக்­கெ­டுப்­பு­மின்றி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது இரா­ஜ­தந்­திர வெற்றி என்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­
யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

மேலும் நான் லிபி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி மும்மர் கடாபியின் தோளில் கையை வைத்திருந்ததாக கூறப்­ப­டு­கின்­றது. எனினும் இது தொடர்பில் பிர­ப­ல­மான அந்த புகைப்­ப­டத் தில் எனது தோளில் கடா­பிதான் கையை வைத்­தி­ருந்தார் என்றும் மஹிந்த ராஜ­பக் குறிப்­பிட்­டுள்ளார்.
ஜெனிவா தீர்­மானம் தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்க பிரே­ரணை எந்த வாக்­கெ­டுப்­பு­மின்றி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது இரா­ஜ­தந்­திர வெற்றி என்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சர்­வ­தேச சட்­ட­வல்­லு­னர்­களின் கண்­கா­ணிப்பில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக பொறி­மு­றைக்கு வெளி­நா­டு­களின் நிதி உத­வியே கிடைக்­க­பெ­ற­வுள்­ளது. இதனால் இலங்­கையின் பொறி­முறை சர்­வ­தேச பல­மிக்க நாடு­களின் நிதி­யினால் முன்­னெ­டுக்க வேண்­டி­யேற்­படும்.
ஆக்­கி­ர­மிப்­பாளர் பிடி­யி­லி­ருந்து இலங்­கையை காப்­பாற்­றி­யுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பதா­கைகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன. எனினும் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்­திற்கும் எந்­த­வொரு சம்­பந்­தமும் கிடை­யாது.
அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­மையின் ஊடாக இலங்­கைக்கு எந்­த­வொரு நலனும் கிடைக்­க­பெற போவ­தில்லை. இதனால் இலங்­கைக்கு பாதிப்பு ஏற்­படும் என்­ப­த­னையோ அல்­லது அர­சியல் ரீதி­யாக சாத்­தி­ய­மற்­றது என்ப­தனை புரிந்­து­கொள்­ளாமல் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது.
நாட்டில் பாது­காப்­பிற்கு உறு­து­ணை­யாக உள்ள இரா­ணுவ வீரர்­களை பாது­காக்க வேண்­டி­யதே அர­சாங்­கத்தின் பிர­தான கட­மை­யாகும். அமெ­ரிக்கா பிரே­ர­ணையின் 6 மற்றும் எட்­டா­வது பரிந்­து­ரைகள் புனி­த­மான பொறுப்­பு­க­ளுக்கு எதி­ரா­ன­தாகும்.
மேலும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன் இறக்­கு­ம­திக்கு தடை விதிக்­கப்­பட்­டமை அர­சியலை மைய­மாக கொண்டு இடம்­பெற்­ற­தல்ல. அது சமுத்­திர ரீதி­யான ஏற்­பட்ட பிரச்­சினை என்­ப­தனை மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை என்­பது அர­சியல் ரீதி­யான நிபந்­த­னையை மைய­மாக கொண்ட சலு­கை­யாகும். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிக­ழ்ச்சி நிரலை இலங்­கையின் மீது சுமத்தும் திட்­டத்தை மைய­மாக கொண்டே குறித்த சலு­கையை மீளப்­பெ­று­வ­தற்கு என்­னு­டைய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.
சர்­வ­ஜன வாக்­கு­ரி­மையின் ஊடாக மக்கள் அரசாங்கத்தை நிறுவியது நாட்டிற்கு ஏற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு என்பதனை மறந்துவிடக்கூடாது . நான் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாபியின் தோளில் கையை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் பிரபலமான அந்த புகைப்படத்தில் எனது தோளில் கடாபிதான் கையை வைத்திருந்தார்.