இதன்படி, அவருக்கு இனிவரும் காலத்தில் எந்தவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளுர் போட்டி ஒன்றில் விக்கட் காப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த அண்டசர்ன், துடுப்பாட்ட வீரர் ஒருவரை தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்தினர்.
இந்த மோதலை அடுத்தே ஜோசன் அண்டர்சனுக்கு வாழ்நாள் தடையும், கைகலப்பில் ஈடுபட்ட ஜோர்ஜ் ஓ பிரையன் என்ற வீரருக்கு 6 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.