Advertisement

Main Ad

ஒன்பது வயதான சிறுமிக்கு ஆபாசப்படம் காண்பித்த இளைஞருக்கு விளக்கமறியல்!



ஒன்­பது வயது சிறுமி ஒரு­வ­ருக்கு கைய­டக்கத் தொலை­பேசி மூலம் ஆபாச படக் காட்­சி­களை காண்­பித்த இளை­ஞனை கண்டி நீதி­மன்ற நீதிவான் எதிர்­வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

கண்டி அங்­கும்­புர பொலிஸ் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் நிகழ்ந்­துள்­ளது.
சிறு­மியின் வீட்­டிற்கு அருகில் சிறு­மியை  அழைத்துச் சென்று அயல் வீட்டு இளைஞர் ஒருவர் கைய­டக்க தொலை­பேசி மூலம் ஆபா­சப்­படக் காட்­சி­களை காண்­பித்துக் கொண்­டி­ருப்­பதை அய­ல­வர்கள் சிலர் அவ­தா­னித்­துள்­ளனர்.

இவர்கள் உட­ன­டி­யாக அங்­கும்­புர பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­ய­தை­ய­டுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறிப்­பிட்ட  இளை­ஞரை கைது செய்து கைய­டக்க தொலை­பே­சி­யையும் கைப்­பற்றி பரி­சீ­லித்த பின்னர் இளை­ஞனை கண்டி நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர்.

நீதிவான் சந்­தே­க­ந­ப­ரான இளைஞரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.