Advertisement

Main Ad

தூய கடற்கரை - 2015 வேலைத்திட்டம் திருகோணமலையில்...( படங்கள் )



தூய கடற்கரை 2015 வேலைத்திட்டத்தின்  கீழ் தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று திருகோணமலை மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் கடல்சார் சூழல் பாது காப்பு அதிகார சபை இதனை அமுல் படுத்தி வருகின்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.புஸ்பகுமார மற்றும் முக்கிய பிரமுகர்கள், பாடசாலை சமூகம் மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.