CM media
கடந்த மாதம் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட
யாழ்ப்பாணம்,
ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 8ஆம்
வட்டாரத்தைச் சேர்ந்த உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 18 வயது
மாணவி சிவலோகநாதன் வித்தியா
கொலையின் குற்றவாளிகளுக்கு அதிக பட்சமான தண்டனை அவசரமாக வழங்கப்படவேண்டும் என்று இன்று கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரேரணை ஒன்றை சமர்பித்தார்.
கொலையின் குற்றவாளிகளுக்கு அதிக பட்சமான தண்டனை அவசரமாக வழங்கப்படவேண்டும் என்று இன்று கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரேரணை ஒன்றை சமர்பித்தார்.
கிழக்கு
மாகாண சபையின் சபை அமர்வு இன்று 16 காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
அதன்போது கொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்திற்கு அனுதாபம்
தெரிவிக்கப்பட்டதுடன், கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில்
குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும்
என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

