Advertisement

Main Ad

இன்றைய மாகாண சபை அமர்வில் பெரும் அமலிதுமளி

அபு அலா –




கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) காலை செவ்வாய்க்கிழமை 9.30 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அமர்வின்போது எதிர்க்கட்சியினர், எதிர்கட்சி தலைவரை நியமிக்குமாறு கோரி தங்களின் பிரரேனையை கொண்டுவந்ததையடுத்து சபையில் பெரும் அமலிதுமளி ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து தவிசாளரினால் சபை நடவடிக்கைகள் 30 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட சபை மீண்டும் 10.30 மணியளவில் கூடியதைன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க நியமிக்கப்பட்டார்.