வாக்காளர்களுக்கு 2 வாக்குச்சீட்டு உயயோகிப்பதற்கான உரிமை வழங்கப்படாவிட்டால் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என 18 சிறு மற்றும் சிறுப்பான்மை கட்சிகள் இணைந்து சற்று முன் தெரிவித்துள்ளன.
20 ஆவது தேர்தல் திருத்தம் தொடர்பில் வோட்டர் எட்க் ஹோட்டலில் 18 சிறு மற்றும் சிறுப்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை கலந்துறையாடினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,
இரண்டு வாக்குச் சீட்டுக்களை வாக்களிக்க உபயோகிக்கும் முறை அவசியம் எனவும் அப்போது வழங்க தவறும் பட்சத்தில் ஆதரவளிக்கப்பபோவதில்லை என தெரிவித்தார்.

