Advertisement

Main Ad

கழிவுப் பொருட்களைக் கொண்டு கல்முனை இளைஞனின் அழகிய வீடு (படங்கள்)

 
யு.எம்.இஸ்ஹாக்
 
கற்பனை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமான வடிவங்களைக் கொண்டுள்ளது அவ்வாறானதொரு வித்தியாசமான கற்பனையில் பொழுது போக்காக உருவாக்கப்பட்ட மாதிரி வீடொன்றை இங்கு எமது  இணையதள  நேயர்களுக்கு வழங்குகின்றோம் 
 கல்முனைக் குடி 04 ஆம் குறிச்சியை சேர்ந்த இளைஞரான ஜே.எம். அஜ்வத் என்பவர் தனது வீட்டில் பொழுது போக்காக அழகிய மாதிரி வீடொன்றை அமைத்து அழகு பார்த்து வருகின்றார்.
தனது வீட்டின் தனி ஒரு அறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வீடு நிஜமான வீடு போல் காட்சி தருகின்றது. இதனை அமைப்பதற்கு 03 மாத காலமும் இ 19 ஆயிரம் ரூபா செலவும் செய்துள்ளார்.இதற்கென கூடுதலான கழிவுப் பொருட்களே அவரால் பயன் படுத்தப் பட்டுள்ளது.