Advertisement

Main Ad

பாடசாலை பஸ் விபத்து: பெண் நடத்துனர் பலி ..

 niroojan bala

பாணந்துறை வாதுவை மொரென்துடுவே எனுமிடத்தில் பாடசாலை பஸ்ஸொன்று வயலுக்குள் புரண்டு விபத்துக்குள்ளானதில் அந்த பஸ்ஸின் நடத்துனர் (பெண்), பலியானதுடன் மாணவியொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரொந்துடுவ கல்துடேயிலிருந்து மொரொந்துடுவ ஊடாக பாணந்துறை வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிசென்ற பஸ்ஸே மொரொந்துடுவ பாலத்துக்கு அருகில் புரண்டு விபத்துக்குள்ளாது.

குவிழந்து புரண்டிருந்த பஸ்ஸை பிரதேசவாசிகள் தூக்கி முறையாக நிறுத்தியதன் பின்னர் பஸ்ஸுக்கு அடியில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டெடுத்து காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவ்வாறு காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பஸ்ஸின் நடத்துனரான பெண்ணே உயிரிழந்துள்ளார்