Advertisement

Main Ad

சமூக வலைத்தளங்கள் மூலம் இன, மத குரோத கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை: அரசாங்கம் அறிவிப்பு

  சமூக வலைத்தளங்கள் மூலம், இன மற்றும் மத வெறுப்புணர்வு கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுஎன அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

பேஸ்புக், டுவிட்டர் முதலான சமூக வலைத்தளங்கள் மூலம், இன மற்றும் மத வெறுப்புணர்வு கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு  பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

   சட்டம் ஒழுங்கு அமைச்சுடனான கூட்டமொன்றின்போது  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.