Advertisement

Main Ad

பாவனைக்கு உதவாத அரிசி ஓட்டமாவடி ஆற்றில் கொட்டி அழிப்பு (படங்கள்)

பாவனைக்கு உதவாத அரிசி ஓட்டமாவடி ஆற்றில் கொட்டி அழிப்பு (படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து பாவனைக்குதவாத 25 கிலோ கிராம் நிறையுடைய 26 அரிசி பைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவை கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.ஆர்.ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்வர்த்தக நிலையத்தில் தரம் குறைந்த அரிசி விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவ்வர்த்தக நிலையத்தை சோதனையிட்டதாகவும், இதன்போது பாவனைக்குதவாத அரிசியை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

பாவனைக்குதவாத அரிசி ஓட்டமாவடி ஆற்றில் கொட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளினால் அழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.