Advertisement

Main Ad

அம்பாரை - கண்டி பிரதான வீதியில் கரங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.



அம்பாரை - கண்டி பிரதான வீதியில் கரங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (27) அதிகாலை 3.40 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அம்பாரை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் வண்டி வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வண்டியின் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.