Advertisement

Main Ad

விடு­தலைப் புலி­களின் புதிய தலைவர் கோபி? : தகவல் தரு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் பரிசுத் தொகை

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸா­ரினால் மேற்­கொள்­ளப் பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­களில் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பொன்­னையா செல்வ நாயகம் கஜீபன் எனப்­படும் கோபி அல்­லது காசியன் மற்றும் அவ­ரது உத­வி­யா­ள­ராக கூறப்­படும் நவ­ரத்னம் நவ­னீதன் எனப்­படும் அப்பன் ஆகியோர் தொடர்பில் தகவல் வழங்­கு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் ரூபா பணப் பரி­சினை பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.
31 வய­தான கோபி மற்றும் 36 வய­தான அப்பன் ஆகியோர் தொடர்பில் சரி­யான தகவல் ஒன்­றினை வழங்­கு­வோ­ருக்கே இந்த பரி­சுத்­தொகை அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோகன சுட்­டிக்­காட்­டி­ய­துடன் தகவல் வழங்­கு­வோரின் இர­க­சியம் பேணப்­பட்டு அவர்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்டார்.
கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி, தர்ம புரம் பிர­தே­சத்தில் கோபியை கைது செய்ய விஷேட பொலிஸ் குழு­வொன்று சென்­றி­ருந்த நிலையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் ரத்ன குமார மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்­டு­விட்டு அவர் தப்பிச் சென்­றி­ருந்தார். இதனைத் தொடர்ந்து விசா­ர­ணை­களைத் தொடர்ந்த பயங்­கர வாத புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கோபிக்கு பாது­காப்பு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கிய குற்­றச்­சாட்டின் கீழ் 50 வய­தான பாலேந்­திரன் ஜெய­கு­மா­ரியை பயங்­க­ர­வாத தடை சட்­டதின் கீழ் கைது செய்­த­துடன் 18 நாள் தடுப்புக் காவலின் கீழ் பூசா முகாமில் தடுத்து வைத்து விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.
விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரணின் மர­ணத்தை தொடர்ந்து அந்த இயக்­கத்­தினை மீளவும் புத்­துயிர் செய்யும் நட­வ­டிக்­கை­களை கோபி மேற்­கொண்டு வந்­த­தாக பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர். பொட்டு அம்­மானின் கீழ் இயங்­கிய விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுப் பிரிவில் முக்­கிய உறுப்­பி­ன­ராக திகழ்ந்­துள்ள கோபி, 2009 ஆண்டு இடம்­பெற்ற இறு­திக்­கட்ட யுத்­ததின் போது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­துள்ளார்.
எனினும் பூந்தோட்டம் புனர்­வாழ்வு முகா­மி­லி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்த கோபி கட்டார் நாட்­டுக்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்­ள­துடன் அங்­கி­ருந்து நோர்வே சென்று நாடு­க­டந்த தமிழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் எனக் கூறப்­படும் சிவ­ப­ரனை சந்­தித்து அவரின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுள்ள நிலை­யி­லேயே மீண்டும் இலங்­கைக்கு வந்­துள்ளார். இந் நிலை­யி­லேயே அவரை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொன்­டு­விட்டு கோபி தப்பிச் சென்­ருள்­ள­துடன் அவரை தேடி இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து பொலிஸார் விஷேட தேடுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.
6 அடி உய­ரமும் பொது நிற தோற்­றத்­தை­யு­மு­டைய கோபியின் இடது பக்க உதட்டின் மேல் வெட்­டுக்­காய அடை­யாளம் (தழும்பு) ஒன்று காணப்­ப­டு­வ­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
அத்­துடன் நவ­ரத்னம் நவ­னீதன் என்ற அப்பன் 5 அடியும் 2 அங்­கு­லமும் உய­ர­மா­னவர் எனவும் பொது நிற தோற்­றத்தை உடை­யவர் எனவும் பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர்.
இந் நிலை­யி­லேயே இவர்கள் இருவர் தொடர்­பிலும் தலா ஒரு மில்­லியன் ரூபா பணப்­ப­ரி­சினை அறி­வித்­துள்ள பொலிஸ் திணைக்­களம் தகவல் தெரிந்தவர்கள் 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112321838 என்ர பெக்ஸ் இலக்கத்தினுடனோ தொடர்பினை ஏற்படுத்தி அல்லது பெக்ஸ் ஊடாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.