அட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லெதண்டி புரோடோக் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று தாக்கியதில் மூன்று ஆண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளார்.
24.11.2015 அன்று பிற்பகல் அப்பகுதியில் உள்ள தேயிலை மலையில் குறித்த மூவரும் தொழில் செய்து கொண்டிருந்த போது தேயிலை செடி அடிவாரத்தில் இருந்து சிறுத்தை ஒன்று அவர்களை தாக்கிவிட்டு சென்றுள்ளது.
அதன் பின் அவர்கள் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த மூன்று தொழிலாளர்களையும் எவ்வித உயிராபத்துகளும் இல்லாமல் ஏனைய தொழிலாளர்கள் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.