Advertisement

Main Ad

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வழங்கிய வினோத மர­ண­ தண்­ட­னை...

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சிரி­யா­வி­லுள்ள பண்­டைய நக­ரான பல்­மை­ரா­வி­லுள்ள தூண்­களில் மூவரை கட்டி வைத்த பின்னர் அந்த தூண்­களை வெடி வைத்து தகர்த்து அவர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

ஞாயிற்­றுக்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­ தண்­ட­னைகள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளியிட்­டுள்­ளன.
மேற்­படி மூவ­ருக்கும் எதற்­காக மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது என்­பது தொடர்பில் தகவல் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
அந்த மூவ­ருக்­கு­மான மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட இடத்­திற்கு உள்­ளூர்­வா­சிகள் சென்ற போது அங்கிருந்த அலங்காரத் தூண்கள் வெடித்துச் சிதறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.