(க.கிஷாந்தன்)
அட்டனிலிருந்து நுவரெலியா சென்ற லொறி ஒன்று அட்டன் நுவரெலியா
பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அண்மையில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது .
08.07.2015 அன்று மாலை 4.00 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும் அவருக்கு காயங்கள்
எதுவும் ஏற்படவில்லையெனவும் வீதி வழுக்கியதன் காரணமாகவே இவ்விபத்து நேரந்துள்ளதாக திம்புள்ள
பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.




