( அபு அலா )
அட்டாளைச்சேனை
தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 45 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இங்குரான
உத்தர ரஜ மகா விகாரையின் சோம ரத்ன தேரர் இன்று (13) பூரண சுகத்தைப்பெற்று
விகாரைக்கு திரும்பினார்.
இடுப்பு
வலி, கால் வீக்கம் மற்றும் தோல் வியாதியால் கடந்த மாதம் (04) ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட
இங்குரான உத்தர ரஜ மகா விகாரையின் சோம ரத்ன தேரருக்கான சிகிச்சைகள் யாவும் வைத்தியசாலையின்
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
அட்டாளைச்சேனை
தள வைத்தியசாலை விடுதில் சுமார் 45 நாட்களாக தங்க வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த
வைத்திய சிகிச்சையில் பூரண சுகத்தைப்பெற்ற அவர் சந்தோஷ வெள்ளத்தில் அங்கு
கடமையாற்றும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர், டாக்டர் ஜே.யூசுப்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான யு.கே.சம்சுதீன், எஸ்.முனவ்வர்,
எஸ்.எம்.றிஜால்டீன் மற்றும் அங்கு கடமையாற்றிய ஊழியர்களுக்கு நன்றியை
தெரிவித்ததுடன் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.