ஹாலிஎல பிரதேச சபைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
பதுளை போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைத்த போது முச்சக்கரவண்டி முழு அளவில் சேதமாகி உள்ளது.
முச்சக்கரவண்டியில் இருந்தவர் வண்டியை நிறுத்திவிட்டு சென்றிருந்த வேளை பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
