Advertisement

Main Ad

துபாய் இல் ஏறாவூரை சேர்ந்த இருபத்தொரு வயது சஹீம் நீரில் மூழ்கி வபாத்.

U.A.E .சார்ஜாவில் ஏறாவூரை சேர்ந்த இருபத்தொரு வயதுடைய சஹீம் என்ற வாலிபன் கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் இலங்கை மின்சார சபை ,மட்டக்களப்பில் கடமைபுரியும் அஸீஸ் என்பவரின் சாச்சியின் மகனும்,ஏறாவூர்,புகையிரத வீதியில் கோழிக்கடை வைத்திருக்கும் பௌசுல் என்பவரின் மைத்துனரும் ஆவார்.
சென்ற வெள்ளிக்கிழமை சம்பவம் இடம் பெற்று ,இதுவரைக்கும் சார்ஜாஹ் வைதியசாலயில்தான் ஜனாஸா இருப்பதாகவும் சற்றுமுன் என்னோடு தொடர்புகொண்ட சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.
மரணமடைந்தவரின் சகோதரர் ஒருவரும் துபாயில் தொழில் புரிவதாகவும் ,அவருடன் தொடர்பு கொண்டபின்னர் மேலதிக தகவல்களை தருவதாகவும் கூறினார்..


மரணமடைந்தவரின் புகைப்படமும் அனுப்பியுள்ளார்.
இவர் சம்பந்தமான மேலதிக தகவல்கள் தெரிந்த சார்ஜாஹ்வில் தொழில் புரியும் எமது சொந்தங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.(009477  348 5525)